தமிழ் எழுத்துக்கள் அனைத்தும் நம் எல்லாருக்கும் தெரிந்தவையே.
என்றாலும் பாட்டு எழுதுகையில் அவை பயன்படுமாறு அவற்றை வகைப்படுத்தி
அறிந்து கொள்வோம்.
அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள – இவை பன்னிரண்டும் உயிர்
எழுத்துக்கள்.
இவற்றில்,
அ, இ, உ, எ, ஒ – இவை ஐந்தும்
குறில் எழுத்துக்கள்.
ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள – இவை ஏழும்
நெடில் எழுத்துக்கள்.
அடுத்து –
மெய் யெழுத்துக்கள் (புள்ளி
வைத்தவை) 18.
க், ங் ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற்,
ன்.
உயிர்க்குறில் எழுத்துக்களான அ, இ, உ, எ, ஒ
– என்னும் ஐந்தும்
மேற்கண்ட 18 மெய்யெழுத்துக்களோடும் சேர்வதால் பிறக்கும் உயிர் மெய்
எழுத்துக்களும் குறில்
எழுத்துக்களே.
எடுத்துக்காட்டு :
க் உடன் அ, இ, உ, எ, ஒ சேர்ந்தால்
– க, கி, கு, கெ, கொ என்ற
உயிர்மெய்க் குறில் எழுத்துக்கள்
பிறக்கும்.
இதே போல் ச், ..... ன் வரை ஐந்தைந்து குறில்
எழுத்துக்கள் பிறக்கும்.
க் உடன் ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள
கூடினால் கா, கீ, கூ, கே, கை, கோ, கெள
என்ற உயிர்மெய் நெடில்
எழுத்துக்கள் பிறக்கும்.
இதே போல், ச்..... ன் வரை ஏழேழு நெடில்
எழுத்துக்கள் கிடைக்கும்.
குறுகிய ஓசை உடைய எழுத்துக்கள் குறில் எனப்படும்.
நீண்ட ஓசை உடைய எழுத்துக்கள் நெடில் எனப்படும்.
புள்ளியை உடைய எழுத்துக்களும் ஆய்த எழுத்துக்களும்
ஒற்று எனப்படும்.
எழுத்துக்களில் இவற்றைத் தெரிந்தால் போதும் இப்போது.
இவற்றில், புரியாதது எதுவும் இருந்தால் தயங்காமல் உடனே கேளுங்கள்.
அடுத்து,
அசை தெரிந்து கொள்ளப்போகிறோம்.
வளரும்.......
--
நன்றி
தமிழநம்பி