சீர்களால் அமைந்தது அடி. பாட்டுக்கு
உறுப்பாக இருப்பது.
அடி என்பதும் வரி என்பதும் ஒன்றன்று.
ஓர் அடியை இரண்டு வரிகளாகவோ பல
வரிகளாகவோ எழுதலாம்.
சீர்களின் எண்ணிக்கையை வைத்து,
அடிகளுக்குப் பெயர்கள் இடப்பட்டுள்ளன.
இரண்டு சீர்
கொண்ட அடி -
குறளடி
முச்சீர்(மூன்று
சீர்) அடி -
சிந்தடி
நாற்சீரடி -
அளவடி
ஐஞ்சீர்
அடி
- நெடிலடி
ஐந்துக்கும்மேற்பட்ட சீர்
கொண்ட அடி -
கழிநெடிலடி
எடுத்துக்காட்டு : 1.குறளடிப் பாடல்:
என்றும் இளமை
குன்றா தொளிரும்
பொன்றா இனிமை
துன்றும் தமிழே!
2. சிந்தடிப் பாடல் :
நாட்டிற் பிறந்த நாள்முதலாய்
வேட்ட பொழுதில் விரைந்தெனக்குப்
பாட்டும் உரையும் பாலமிழ்தாய்
ஊட்டும் தமிழே உயிரன்னாய்!
3. அளவடி (ஓர் அடி மட்டும்) :
நெல்லுக் கிறைத்தநீர் வாய்க்கால் வழியோடி
4. நெடிலடி (ஓர் அடி மட்டும்) :
முன்னைப் பழமை மொழிக்கெல்லாம் முன்வந்த மூத்தவளே
5. கழிநெடிலடி (அறு சீர் - ஓர் அடி
மட்டும்) :
உலகிடை மொழிக ளெல்லாம்
உயர்தமிழ்க்
கிணைய வாமோ?
அடுத்ததாகத்
தொடை
பற்றித் தெரிந்து கொள்வோம்.
தொடை பற்றி அறிந்து
கொண்டதும், ஒருவகைப் பாடல் எழுதப் பயில இருக்கிறோம்.
tamilparks
@
gmail . com
என்ற முகவரிக்கு
அனுப்பி வையுங்கள்
வளரும்.......
நன்றி
தமிழநம்பி