ஒத்த ஓசை உடைய சீர்களையும் அடிகளையும் ஒன்றாகத்தொடுப்பது தொடை எனப்படும்.
தொடை, பாட்டின் ஓசைக்கும் இனிமைக்கும் இன்றியமையாததாகும்.
மோனை, எதுகை, இயைபு முதலியன ஒத்த ஓசைகள்.
தமிழ் மக்கள் பேச்சில் இடம்பெறும் பழமொழிகளிலும் சொலவடைகளிலும் ஒத்த ஓசைகள் தாமாகவே அமையும்.
மோனை : முதல் சீரின் முதல் எழுத்தோடு அடுத்து வரும் சீர்களில் ஒன்றிலோ பலவற்றிலோ உள்ள முதல் எழுத்து ஒன்றி வருவது மோனை எனப்படும்.
எடுத்துக்காட்டு :
உதட்டில் உறவும் உள்ளத்தில் பகையும்
அழுதாலும் பிள்ளை அவளே பெறவேண்டும்
ஆரும் அடிக்கவில்லை; ஐவிரலும் தீண்டவில்லை;
ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும்
ஓர் அடியிலுள்ள சீர்களில் முதல் எழுத்து ஒன்றி வருவது சீர்மோனை எனப்படும்.
அடிதோறும் முதலெழுத்து ஒன்றி வருவது அடி மோனை எனப்படும்.
tamilparks
@
gmail . com
என்ற முகவரிக்கு
அனுப்பி வையுங்கள்
வளரும்.......
நன்றி
தமிழநம்பி