திருமணத்தில் முடிந்தாலும்
விழியம்புகளால்
சல்லடையானது...
அவனின்
இதயம்!
இதயங்கள்
இடம் மாறியபோது
துடிக்க மறந்தது
அவளின் இதயம்!
உறவுக்கு பாலமாய்
உளம் நிறை செய்திக்கு
தூதுவர்களாய் அவர்களின்
கைப்பேசிகள்!
காதலில் வெற்றிகண்டு
திருமணத்தில் முடிந்தாலும்
உணர்வுகளின் துடிப்பில்
உதித்தது மழலை!
தாய்மொழி கல்வி மறந்து
அந்நிய மோகத்தால், பிள்ளைகளின்
ஆங்கில வழிக் கல்வியால்-இன்று
சல்லடையானது
இவர்களின்
குடும்ப பட்ஜெட்!
கா. ந. கல்யாணசுந்தரம்,
|