கண்களால் கைது செய்...
மலரே... என்ன தயக்கம்?
ஏனோ இந்த கலக்கம்
மயக்கம் அது முதிர்ந்தால்
வரும் நெருக்கம்.
அழகே... உந்தன் வெட்கம்,
ஏன் தான் இன்னும் குழுப்பம்?
வெட்கம் அது உதிர்ந்தால்,
சொர்க்கம் திறக்கும்.
ரோஜாக்களின் கணம் மாறுமா?
நிறம் மாறினால் மணம் மாறுமா
ஆகாயத்தின் நிறம் மாறலாம்,
நிறம் மாறினால் நிலை மாறுமா
உன்னில் என்னை தினம் காணவே,
என்னில் உன்னை பூஜிக்கிறேன்
உன் கண்ணில் என்னை நீ ஏற்கவே,
என் கண்ணில் உன்னை நான் சுவாசிக்கிறேன்.
என் பாதையோ, முள் பாதையே,
உன்னால் தான் பூ வானதே.
நாளை என்று எனகில்லையே,
உனை பார்த்ததும் நாளை உண்டானதே.
விதி என்பதோ, இறைவன் சதி செய்வதோ
நீ இல்லாது எனக்கொரு வாழ்வென்பது.
அடடா அது கொடுமை
மரணம் அதை விட இனிமை
மீ. வேலு
|