கூட்டுக் கிளி
அருவி போல்
இருந்தவள் நான்
அடைபட்டுக் கிடக்கிறேன்
காற்றை போல் இருந்தவள் நான்
கல்லை போல் இருக்கிறேன்
மலரை போல்
இருந்தவள் நான்
மணம் இழந்து இருக்கிறேன்
பெரும் சிரிப்புகள் சிதைந்து
புன்னகையாய் ,குறுஞ்ச் சிரிப்பாய்
அதையும் அளந்து பார்த்து
அதட்டி வைக்கும் தாய்
ஓடி ஆடிய என்னை
நாடி வந்த வளர்ச்சி
பாடித் திரிந்த நான்
பல் இளிக்காமல்
பள்ளிக்கு செல்லும் நிலையில் விட
குளத்து நாரையை
கூட்டுக் கிளியாக்கிய வளர்ச்சி
நான் வெறுக்கும் மலர்ச்சி
நன்றி
சின்னு (சிவப்பிரகாசம்) |