ஏப்ரல் மாதக் கதை
ஹ …. ஹ…. ஹ …
நடுநிசி .. மெதுவாக .. .. மெதுவாக .. .. ஒரு உருவம். ஓசையே எழவில்லை .
அடி மேல் அடி வைத்து வந்தது. அறையின் கதவோரம் வந்துவிட்டது..
ஐயோ!
தாழ்ப்பாளையும் திறந்து விட்டது.உள்ளே கண்கள் வட்டமிடுகின்றன.
என்ன அது? ஒன்றும் புரியவில்லை. இடுகாட்டு அமைதி! ஊசிபோட்டால்
ஓசைவரும். அப்படி என்னதான் செய்யப்போகிறது அது? எங்குதான்
போகப்போகிறது? சிரிது நேரம் கண்களை உருட்டிப்பார்க்கிறது.
"ஐயோ உருவமே நீ செய்வது உன் மனைவிக்கு துரோகம். இரவில்
எங்கேபோகிறாய், பயந்து, பயந்து? ஏன் இப்படி புத்தி பேதலித்தது உனக்கு?
அதோ உன் மனைவி அழகாகத் தன்னை மறந்து உறங்குவதை உன் அசுரக்கண்ணால்
பார். உன்னையே நம்பியிருக்கும் உன் மனைவிக்கு நீ செய்வது துரோகம்',
இப்படி எங்கிருநதோ குரல் கேட்கிறதே! அதை லட்சியம் செய்ததாகக் காட்டிக்
கொள்ளவில்லை, அந்த உருவம். மெல்ல அறையை மூடிவிட்டு வெளியே வந்தது.
ஜன்னல்! எட்டிப்பார்த்தது, மாடியிலிருந்து.
ஒரே இருட்டு. மின்சார வெட்டு அதன் காரணமாக எங்கும் ஒரே இருட்டு!
படிகளில் இறங்குகிறது. எப்படித்தான் அதனால் சத்தமில்லாமல்
இறஙகமுடிகிறதோ?
கீழே .. .. ..
ஒரு அறைக்கள் நுழைகிறது! டேய், யாரும் கூப்பிடவில்லை. உருவத்தின் மனம்
தான் கேட்டது. உன்னை நம்பி உன் வீட்டில் தங்கியிருக்கும் உன்
நண்பனுக்கு துரோகம் எண்ணாதே! போ! திரும்பிப்போ! உன் வீட்டில் அவன்
தங்கியிருக்கும் போது அவமானம் நேர்ந்நால் பொறுப்பெல்லாம்
உனக்குத்தான். அப்படியிருக்க நீயே அவமானப்படுத்த நினைக்கிறாயே!'
உள்ளத்தின் குரல்கள் பெரும்பாலான நேரத்தில் தோற்றுவிடுகிறது. அது
நல்லதைச் சொல்வதுதானோ, அதற்குக் காரணம்!
ச் ... ..ஹ..... ( என்ன) ஒரு உச் ஒரு ஹ மெதுவாகப் போட்டுவிட்டு
அலட்சியமாக அறைக்குள் காலடி எடுத்து வைத்தது.
கொஞ்ச நேரத்தில் என்ன நேரப்போகிறது என்று தெரியாமல் உறங்கிக்
கொண்டிருக்கின்றனர் குமாரும் அவன் மனைவி லட்சுமியும். ஒரே
படுக்கையில், தன்னை மறந்த நிலையில், உலகை இழந்த உருவில், நித்திரைத்
தேவன் மடியில்..... சொர்க்கத்தில் இருக்கிறார்கள்
'டங்' மணி ஒன்று அடித்தது. உருவம் பர பரத்தது. கொஞ்ச நேரத்தில்
முடித்து விடவேண்டும்.
மீண்டும் அதே நடை அடிமேல் அடி வைத்தது.
அருகில் சென்றது. லட்சுமிக்கு அருகில்......
பட் அதன் மேல் ஒரு அடி! வைத்தவர் யார்? ஆம் பலமான அடி!
குமாரின் அன்புப் பிடியிலிருந்து விடுபட்ட லட்சுமிதான் மல்லாந்து
புரண்டாள். அங்கங்கள் மூடும் ஆடை விலகி... பாவம்..... அக்காட்சிகள்
வேண்டாம்.
'உயிர் நண்பன், நீ செய்வது சரியில்லை, அவமானப்படுத்தாதே!' அது எல்லாம்
எடுபடாது அப்பனே! துணிந்த மனமா திரும்பிச்செல்லும்? ஒரு வெள்ளைக்
காகிதத்தை எடுத்தது.
காகிதத்தின் நடுவில்......
கருப்புமையா, ஓட்டையா என்று இருட்டில் தெரிந்து கொள்ள முடியாதுதான்.
எடுத்தது விஷமோ? லட்சுமியின் நெற்றியில் ஒட்டியது.
ஐயோ, பாவம்! அவள் கதை முடிந்தது.
அடுத்து......
அவன்!மெதுவாக அவன் பக்கம் திரும்பியது அவ்வுருவம்.
மற்றொரு தாளை எடுத்தது!
அவன் மீதும் ஒட்டிவிட்டது.
அவன் கதையும் முடிந்தது, திரும்ப வேண்டியதுதான.
மெதுவாக உருவம் திரும்பியதுதான் தாமதம்.
மென்னியில் ஒரு அடி, கழுத்தில் இருக்கமான பிடி. ஐயோ, திருடன்!
திருடன்!, லட்சுமி எழுந்து ஸ்விட்சைப்போட்டாள். விளக்குதான் எரியாதே!
தீக்குச்சியைக்கிழித்து விளக்கை ஏற்றினாள்.
அதற்குள்ளாகவேத் 'திருடன் இல்லை, நான்தான், நான்தான் என்று கத்தத்
தொடங்கிவிட்டது அந்த உருவம்.
விளக்கின் ஒளியில் பார்த்த குமார் திடுக்கிட்டான். 'ரமேஷ், நீயா!?'
என்றான்.
அதற்குள் அந்த மெல்லிய ஒளியில லட்சுமி குமாரைப்பார்த்து சிரிக்க (!)
குமார் லட்சுமியைப்பார்த்து சிரிக்க (!)
அவர்களுக்கு எப்படித்தான் அந்த நிலையிலும் சிரிப்பு வந்ததோ?
'நான்தான! நாம் ஹாஸ்டலில் தங்கி படித்தபோது ஒருமுறை இரவில்
உருளைக்கிழங்கை வெட்டி A.F. போட்டு வேட்டியெல்லாம் இரவிலேயே ஒட்டி,
அது தெரியாமல் காலையில் நான் எழுந்து வர எலலோரும் கேலி செய்தனரே, அதே
தேதிதான் இன்று! ஏப்ரல் ஒன்று!, இன்று என் டே(ர்)ன் (turn). உங்கள்
முகத்தில் A.F. ஒட்டி நீங்கள ஒருவரை ஒருவர் பார்த்து சிரிக்க, உங்கள்
இருவரையும் எல்லோரும் பார்த்து சிரிக்க, எலெலோரையும் முட்டாளாக்கி
நான் சிரிக்கலாம் என்றிருந்தேன். அதற்குள் திருடன், திருடன் என்று நீ
உதைக்க நான் மாட்டிக்கொண்டு நானே முட்டாளாகி விட்டேன் எனெறு அவன்
சொல்லி முடித்ததும்
ஹ...ஹ...ஹ.... என்று மூவரும் சேர்ந்து சிரித்தனர்
அன்புள்ள
கண்ணபிரான்.G
|