பயிலரங்கின் இன்றைய பகுதியில், இதுவரை அறிந்து கொள்ளாத ஒரு செய்யுள் உறுப்பைப் பற்றி அறிந்து கொள்ள இருக்கிறோம்.
சீரோடு சீர் சேரும்படி அமைத்து அடியை இயற்றுகிறோம். அடியில் சீர்களின் இடைநின்று இசைத் தொடர்ச்சி உண்டாகுமாறு அச் சீர்களைக் கட்டுவது அல்லது பிணிப்பது அல்லது இணைத்து அமைப்பது தளை எனப்படும்.
நின்ற சீரின் ஈற்றசையும் வரும்சீரின் முதல் அசையும் விதிப்படி ஒன்றியேனும், ஒன்றாமலேனும் கூடி நிற்பதையே தளை என்கிறோம். தளை என்றால் கட்டு என்று பொருள்.
தளை ஏழு வகைப்படும். அவையாவன :
1. நேர் ஒன்று ஆசிரியத்தளை.
2. நிரை ஒன்று ஆசிரியத்தளை.
3. இயற்சீர் வெண்டளை.
4. வெண்சீர் வெண்டளை.
5. கலித்தளை.
6. ஒன்றிய வஞ்சித்தளை.
7. ஒன்றாத வஞ்சித்தளை.
ஒன்றுதல் என்றால் பொருந்துதல் என்று பொருள்.
வெண்+தளை = வெண்டளை.
வெண்டளை – வெண்பாவுக்குரிய தளை.
கலித்தளை – கலிப்பாவுக்குரிய தளை.
இனி, ஒவ்வொரு தளையாக ஏழு தளைகளையும் அறிந்து கொள்வோம்.
--------------------------------------------------------------